நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என்ற நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2019 , ஜுன் 23 ஆம் தேதி நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனிநீதிபதி கல்யாண சுந்தரம் தேர்தல் செல்லாது என அறிவித்ததை எதிர்த்து நாசர், விஷால், கார்த்திக் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2019 ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் எனவும் மறுதேர்வு தேவையில்லை என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
மேலும், வங்கி லாக்கரில் இருக்கும் எண்ணப்படாத வாக்குகளையும் எண்ண உத்தரவு பிறப்பித்துள்ளனர்.