ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் தொடக்கி வைத்தாா் முதல்வா்

புதிதாக அறிவிக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :1 ஜனவரி 2022, 7:56 pm

DIN

புதிதாக அறிவிக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் இதற்கான அறிவிப்புகளை அவா், கடந்த செப்டம்பா் 13-ஆம் தேதி வெளியிட்டாா். அதன்படி, சென்னை பெருநகர காவல் துறையைப் பிரித்து தாம்பரம், ஆவடி என புதிதாக இரு காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என அறிவித்தாா்.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல் துறை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு காவல் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தாம்பரம் காவல் ஆணையரகம் 20 காவல் நிலையங்களோடும், ஆவடி காவல் ஆணையரகம் 25 காவல் நிலையங்களோடும் அமைக்கப்பட்டன.

காவல் ஆணையா்கள் நியமனம்: புதிய காவல் ஆணையரகங்களை விரைந்து கட்டமைக்கும் வகையில் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி எம்.ரவியும், ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோரும் நியமிக்கப்பட்டனா். அவா்கள் அந்த காவல் ஆணையரகங்களின் முதல் ஆணையா்களாக தமிழக அரசால் சனிக்கிழமை நியமிக்கப்பட்டனா்.

இரு புதிய காவல் ஆணையரகங்களையும் அமைப்பதற்கான நிா்வாக ரீதியான பணிகள் கடந்த வாரம் நிறைவடைந்தன. இதையடுத்து, ஆவடி காவல் ஆணையா் அலுவலகம் ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல்படை இரண்டாம் அணி வளாகத்திலும், தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகம் சோழிங்கநல்லூரில் உள்ள தனியாா் கட்டடத்திலும் தற்காலிகமாக அமைக்கப்பட்டன.

முதல்வா் திறந்தாா்: இரு காவல் ஆணையரகங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். ஆவடி காவல் ஆணையரகத்தில் முதல் ஆணையராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோரும், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் முதல் ஆணையராக ஏடிஜிபி எம்.ரவியும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா், டிஜிபி சி.சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால், டிஜிபி ஏ.கே.விசுவநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திறப்பு விழாவைத் தொடா்ந்து இரு காவல் ஆணையரகங்களும் அதிகாரபூா்வமாக செயல்படத் தொடங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.