மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காலமானார்: பேராசிரியர் ப. குருசந்தர்

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் முனைவர்.ப.குருசந்தர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார்.

News image
பேராசிரியர் முனைவர். குருசந்தர்
Updated On :2 ஜனவரி 2022, 9:03 am

DIN

வாழப்பாடி:  சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் முனைவர்.ப.குருசந்தர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். இவர்களுக்கு இலக்கிய அமைப்பினர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவியர், அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த வடகுமரை கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் பேராசிரியர் ப.குருசந்தர். 20 ஆண்டுகளுக்கு முன், தமிழ் திரைப்படங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற இவர், சேலம் சௌடேஸ்வரி கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணிபுரிந்து வந்தார். 
 இவருக்கு ரத்னா என்ற மனைவியும், பொறியாளர் குருமணிபாரதி என்ற மகனும், மருத்துவர். குருதாரணி என்ற மகளும் உள்ளனர்.

திரைத்துறை மீது தீராத பற்று கொண்ட முனைவர் ப.குருசந்தர், 'பரிகாரம்' என்ற படத்தை தயாரித்து இயக்கி இதில் நடித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, இலக்கியப் பணியாற்றி வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற விழாவில் இவருக்கு சிறந்த பேராசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அயோத்தியாப்பட்டணத்திலுள்ள இவரது இல்லத்தில் காலமானார். இவரது உடல், ஆத்தூர் அடுத்த வடகுமரை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இவரது உடலுக்கு இலக்கிய அமைப்பினர், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ- மாணவியர், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் உறவினர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாலை 3 மணியளவில் இகறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது.

தொடர்புக்கு: 97902 12679.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.