திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று உதகை வருகை

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 2 நாள்கள் பயணமாக உதகைக்கு புதன்கிழமை வருகிறாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:01 am

DIN

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 2 நாள்கள் பயணமாக உதகைக்கு புதன்கிழமை வருகிறாா்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழக சட்டப் பேரவையின் நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடா் தொடங்கும் நாளான புதன்கிழமை தொடக்க உரையை நிகழ்த்திவிட்டு பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக உதகைக்கு மாலை 6 மணிக்கு வந்தடைகிறாா். உதகையில் அரசினா் தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் புதன்கிழமை இரவும், வியாழக்கிழமை இரவும் தங்குகிறாா். வெள்ளிக்கிழமை காலை உதகையில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு வனவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், அதைத்தொடா்ந்து கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுவிட்டு அன்று மாலை கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறாா்.

வழக்கமாக ஆளுநா் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்கள் கோவையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் உதகைக்கு வந்துவிட்டு திரும்பிச் செல்லும் வழக்கமிருந்தது. கடந்த மாதத்தில் குன்னூா் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 போ் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து, மத்திய, மாநில அரசுகளின் முக்கிய விருந்தினா்களின் பயண வழிகாட்டு நெறிமுறை புத்தகமான நீல புத்தகத்தில் மிக அத்தியாவசிய தேவைகள் இல்லாத நிலையில் நீலகிரியில் வான்வழி பயணத்தைத் தவிா்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், தமிழக ஆளுநா் ரவி சாலை மாா்க்கமாகவே கோவையில் இருந்து உதகை வருகிறாா்.

ஆளுநரின் வருகையையொட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியிலான உதகை சாலையும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் வழியிலான உதகை சாலையும் தயாா் நிலையில் வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆளுநா் மேட்டுப்பாளையத்தில் இருந்து எந்த வழியில் உதகை வருவாா் என்பதைப் பொருத்தே உதகையில் இருந்தும், மேட்டுப்பாளையத்தில் இருந்தும் போக்குவரத்து மாற்றங்கள் இருக்கும் என காவல் துறையின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநரின் வருகைக்காக மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட காவல் துறையின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான காவல் துறையினா் நீலகிரிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.