நாமக்கல் மாவட்டத்தில் 900 நியாய விலைக் கடைகள் மூலம் 5,37,510 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் செவ்வாய்க்கிழமை முதல் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தினமும் 150 முதல் 200 பேருக்கு பரிசுத் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக வீடு, வீடாகச் சென்று கடை ஊழியர்கள் இரு நாள்களுக்கு முன்பாக டோக்கன் விநியோகம் செய்துள்ளனர். இந்த பொங்கல் பரிசு தொகுப்பில், பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம், மஞ்சள்தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலை பருப்பு 250 கிராம், உளுத்தம்பருப்பு 500 கிராம், ரவை 1 கிலோ, கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 500 கிராம், துணிப்பை ஒன்று என 20 பொருள்களும், ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படுகிறது.