புதுக்கோட்டையில் குண்டு பாய்ந்து சிறுவன் பலியான வழக்கில் 48 துப்பாக்கிகளை புலனாய்விற்காக பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை பசுமலைப்பட்டி காவல்துறை துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தின் அருகே வீட்டிலிருந்த சிறுவன் புகழேந்தி (11) தலையில் குண்டு பாய்ந்து இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அன்றைய நாளில் (டிச. 30) பயிற்சித் தளத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் 34 பேர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 14 பேர் மீது கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக இவர்கள் பயன்படுத்திய இன்சாஸ் மற்றும் ஏகே 303 வகை துப்பாக்கிகளை கீரனூர் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இவையனைத்தும் சென்னையிலுள்ள தடய அறிவியல் பிரிவுக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஏற்கெனவே புகழேந்தியின் தலையில் இருந்து எடுக்கப்பட்ட குண்டு, தடய அறிவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

