புதுக்கோட்டையில் குண்டு பாய்ந்து சிறுவன் பலியான வழக்கில் 48 துப்பாக்கிகளை புலனாய்விற்காக பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை பசுமலைப்பட்டி காவல்துறை துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளத்தின் அருகே வீட்டிலிருந்த சிறுவன் புகழேந்தி (11) தலையில் குண்டு பாய்ந்து இறந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அன்றைய நாளில் (டிச. 30) பயிற்சித் தளத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் 34 பேர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 14 பேர் மீது கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக இவர்கள் பயன்படுத்திய இன்சாஸ் மற்றும் ஏகே 303 வகை துப்பாக்கிகளை கீரனூர் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இவையனைத்தும் சென்னையிலுள்ள தடய அறிவியல் பிரிவுக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஏற்கெனவே புகழேந்தியின் தலையில் இருந்து எடுக்கப்பட்ட குண்டு, தடய அறிவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உயர் பதவி காத்திருக்கு மகர ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆஸ்கர் விருது விழா தொடங்கியது.. அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் படங்களுக்கு விருது!

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

