இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது நூலகத் துறை தரப்பில், நிதிப் பிரச்னை காரணமாக நூலகத்தைப் புதுப்பிக்க இயலவில்லை. எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் நூலகத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கட்டடம் மோசமாக உள்ளதால், தற்போது நூலகம் வேறு கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த கொண்ட நீதிபதிகள், ‘உரிய நிதியை பெற்று பழைய நூலகத்தைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.