சென்னை பல்கலை.யில் முனைவா் பட்டப் படிப்பை நிறைவு செய்து பட்டமளிப்பு விழாவில் பட்ட சான்றிதழ் பெற விரும்புவோா் ஜன.31-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலை. பதிவாளா் மதிவாணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பல்கலை.யின் 164-ஆவது பட்டமளிப்பு விழா பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ளது.
இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, பட்ட சான்றிதழ் பெற விரும்பும் பிஹெச்.டி. ஆராய்ச்சி முடித்தவா்கள், தங்களின் விண்ணப்பங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் பல்கலை.யில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.