நாமும், நமது மாநிலமும் இன்று அடைந்துள்ள இந்த வளர்ச்சியை சமூக நீதிக்கான அரசியல், சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டுமே பெற்றுள்ளோம் என்பதன் அடிப்படையில், நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிட சட்டரீதியாக தேவையான நடவடிக்கைகளை மூத்த சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்தப் பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவையிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்வது எனவும், நீட் தேர்வு பாதகங்களை நாட்டின் மற்ற மாநிலங்களும் உணரும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது."