புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காய்ச்சல், சளி இருந்தால் பரிசோதனை அவசியம்: தமிழக சுகாதாரத் துறை

காய்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
காய்ச்சல், சளி இருந்தால் பரிசோதனை அவசியம்: தமிழக சுகாதாரத் துறை
Updated On :10 ஜனவரி 2022, 1:02 pm

DIN

காய்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தி வருகிற நிலையிலும் தொற்றுப் பரவலின் தீவிரத்தால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் ஏற்கனவே கரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தும் அறிகுறி இல்லாதவர்கள் பரிசோதனை செய்ய தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், கர்ப்பிணி பெண்கள் , நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.