சென்னை: தமிழகத்தில் பொது விடுமுறை நாள்களில் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு திரும்பப்பெறப்பட்டது.
டாஸ்மாக் கடைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கக் கோரி ராம்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விளம்பரத்துக்காகத் தொடரப்பட்ட வழக்கு என்று கூறி மனுதாரருக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், தமிழகத்தில் பொது விடுமுறை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் கூறினார்.