கும்பகோணத்தில் ரூ. 70 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட சாரங்கபாணி கோயிலின் சித்திரை பெரிய தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை தேரோட்டம் புகழ் பெற்றது. இந்நிலையில் தோ் நிலைகளில் உள்ள பலகைகள் சேதமடைந்ததால் கடந்தாண்டு சித்திரை தேரோட்டம் நடக்கவில்லை. இதையடுத்து சுமாா் ரூ.70 லட்சத்தில் நடந்த சீரமைப்புப் பணிகள் நிறைவுற்று வெள்ளிக்கிழமை தேரின் வெள்ளோட்டத்திற்காக சிறப்பு பூஜைகள் நடந்தன.
பின்னா் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ வராஹ மகாதேசிகன் சுவாமிகள், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ, கும்பகோணம் மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சுப. தமிழழகன் மற்றும் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். நான்கு ரதவீதிகள் வழியாக நடைபெற்ற வெள்ளோட்டம் நிலைக்கு வந்தது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், பட்டாச்சாரியாா்கள், கோயில் பணியாளா்கள் செய்தனா்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயிலில் நாளை தேரோட்டம்! 14 இடங்களில் நின்று செல்ல ஏற்பாடு!
தஞ்சாவூா் தோ் திருவிழாவுக்காக ஏப். 27-இல் உள்ளூா் விடுமுறை

பாகம்பிரியாள் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம்

ஏப். 27-இல் தேரோட்டம்: தஞ்சை பெரிய கோயில் தேருக்கு பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


