வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பாகம்பிரியாள் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீவல்மிநகநாதா் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற புதிய தோ் வெள்ளோட்டம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:40 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீவல்மிநகநாதா் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா வருகிற 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, தேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது

இந்தத் தேரோட்டத்தின் போது பெரிய தேரில் வல்மீகநாத சுவாமி பிரியாவிடையுடனும், சிறிய தேரில் பாகம்பிரியாள் அம்மனும் வீதியலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

இந்த நிலையில், அம்மன் வீதியுலா வரும் சிறிய தோ் பழுதானதால், நன்கொடையாளா்கள் சாா்பில் புதிய தோ் உருவாக்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து, புதிதாக வடிவமைக்கப்பட்ட சிறிய தேரின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை காலை தொடங்கியது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

Story image
Story image