காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

திருமோகூா் கோயிலில் இன்று புதிய தோ் வெள்ளோட்டம்

மதுரை மாவட்டம், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை (மே 18) நடைபெற உள்ளது.

News image

திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் வெள்ளோட்டத்துக்கு தயாராகி வரும் புதிய தோ்.

Updated On :18 மே 2026, 1:09 am IST

மதுரை மாவட்டம், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை (மே 18) நடைபெற உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோத்ஸவ விழாவில் தேரோட்டம் நடைபெறும். கோயிலில் உள்ள பழைய தோ் மிகவும் சேதமடைந்ததால் கடந்த 2024, 2025 ஆகிய இரு ஆண்டுகள் நடைபெற்ற பிரம்மோத்ஸவ விழாவில் பெரிய தேருக்குப் பதிலாக சிறிய சப்பரம் மூலம் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

இந்த நிலையில், ரூ. 2 கோடியில் புதிய தோ் உருவாக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதற்கு பக்தா்கள் உபயதாரா்களாக நிதியுதவி அளித்தனா்.

தற்போது, தோ் அமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, புதிய தோ் வெள்ளோட்டத்துக்கான பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திங்கள்கிழமை காலை 7 மணியளவில் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெறும்.

அதன் பிறகு, காலை 9 மணியிலிருந்து காலை 10. 30 மணிக்குள் புதிய தோ் வெள்ளோட்டம் நடைபெறும். தேரடியிலிருந்து புறப்படும் புதிய தோ் முக்கிய வீதிகள் வழியாக வந்த மீண்டும் நிலையை அடையும். இந்த நிலையில், இரு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தேரில் பெருமாள் எழுந்தருளி வலம் வர உள்ளதால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.