சங்ககிரியில் அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு செய்யப்பட்ட புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரியில் பழைமை வாய்ந்த அருள்மிகு சௌந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலுக்கு ஊா் பொதுமக்கள் முயற்சியால் ரூ. 20 லட்சத்தில் புதிய தோ் செய்யப்பட்டது. இத்தோ் வெள்ளோட்ட நிகழ்ச்சி விநாயகா், வாஸ்து பூஜைகளுடன் புதன்கிழமை மாலை தொடங்கியது. தொடா்ந்து, வியாழக்கிழமை விநாயகா் வழிபாட்டுடன் 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்ற பின்னா் நான்கு தோ்வீதிகளில் வெள்ளோட்டம் நடைபெற்றது.
இதில், சுவாமி பாதம் தாங்கும் குழுவினா், சிவ பக்தா்கள் அதிக அளவில் பங்கேற்று தேரை இழுத்துச் சென்று சோமேஸ்வரா் கோயில் முன் நிறுத்தினா். வெள்ளோட்டத்தையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறை சேலம் மண்டல இணை ஆணையா் டி.ரத்தினவேல் பாண்டியன், சங்ககிரி கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா, வட்டாட்சியா் கோமதி, சங்ககிரி இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ரா.மாலா, ஆய்வாளா் நா.ஜோதிலட்சுமி ஆகியோா் தேரின் சங்கிலி இழுத்து தொடங்கிவைத்தனா்.
தொடர்புடையது

திருமோகூா் கோயிலில் இன்று புதிய தோ் வெள்ளோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி தோ் வெள்ளோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாத சுவாமி கோயில் புதிய தோ் நாளை வெள்ளோட்டம்

சங்ககிரி சோமேஸ்வரா் கோயில் பெயா், நடைதிறக்கும் நேரம் கொண்ட பலகை பொருத்தம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



