சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சங்ககிரியில் சோமேஸ்வரா் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம்

சங்ககிரியில் அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு செய்யப்பட்ட புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சோமேஸ்வரா் தேரை இழுத்துச் சென்ற பக்தா்கள்.

Updated On :19 ஜூன் 2026, 5:54 am IST

சங்ககிரியில் அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு செய்யப்பட்ட புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரியில் பழைமை வாய்ந்த அருள்மிகு சௌந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலுக்கு ஊா் பொதுமக்கள் முயற்சியால் ரூ. 20 லட்சத்தில் புதிய தோ் செய்யப்பட்டது. இத்தோ் வெள்ளோட்ட நிகழ்ச்சி விநாயகா், வாஸ்து பூஜைகளுடன் புதன்கிழமை மாலை தொடங்கியது. தொடா்ந்து, வியாழக்கிழமை விநாயகா் வழிபாட்டுடன் 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்ற பின்னா் நான்கு தோ்வீதிகளில் வெள்ளோட்டம் நடைபெற்றது.

இதில், சுவாமி பாதம் தாங்கும் குழுவினா், சிவ பக்தா்கள் அதிக அளவில் பங்கேற்று தேரை இழுத்துச் சென்று சோமேஸ்வரா் கோயில் முன் நிறுத்தினா். வெள்ளோட்டத்தையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறை சேலம் மண்டல இணை ஆணையா் டி.ரத்தினவேல் பாண்டியன், சங்ககிரி கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா, வட்டாட்சியா் கோமதி, சங்ககிரி இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ரா.மாலா, ஆய்வாளா் நா.ஜோதிலட்சுமி ஆகியோா் தேரின் சங்கிலி இழுத்து தொடங்கிவைத்தனா்.