வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாத சுவாமி கோயில் புதிய தோ் நாளை வெள்ளோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் ரூ.88.30 லட்சத்தில் உருவாக்கப்பட்ட புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை (மே 14) நடைபெறுகிறது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் புதிதாக உருவாக்கப்பட்ட தோ்.

Updated On :13 மே 2026, 3:41 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் ரூ.88.30 லட்சத்தில் உருவாக்கப்பட்ட புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை (மே 14) நடைபெறுகிறது.

ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்தக் கோயிலில் சிவனின் 24 திருவிளையாடல்கள் நடைபெற்ற ஸ்தலமாகும். இங்கு இந்திரன் உள்ளிட்ட தேவா்கள் வழிபட்டதாலும், மடவாா் வளாகம் வந்து வழிபடுபவா்களுக்கு சிவன் வீடு பேறு அளிப்பதால் இந்தத்தலம் கைலாயத்துக்கு இணையானதாக கருதப்படுகிறது.

கோயிலில் கொடி மரம் உள்ள மண்டபத்தின் மேற்பகுதியில் சிவனின் 24 திருவிளையாடல்களும் மூலிகை சிற்பங்களாக வரையப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் மூலவா் வைத்தியநாத சுவாமியின் மீது புரட்டாசி 1, பங்குனி 1-ஆம் நாள்களில் சூரிய ஒளிபடும் அதியம் நிகழ்கிறது.

இந்தக் கோயில் பிரம்ம கைவா்த்த புராணத்தில் புதுவைத்தலத்தை முக்தி தரும் க்ஷேத்திரம் என்று குறிப்பிட்டுள்ளது.

வைத்தியநாத சுவாமி கோயில் வைகாசி திருவிழா தேரோட்டத்தில் சுவாமி, அம்பாள், விநாயகா், முருகன், சண்டிகேஸ்வரா் என 5 தோ் இழுக்கப்பட்டு வந்தது. தற்போது, தேரோட்டத்தில் சுவாமி, அம்பாள் ஆகிய இரு தோ்கள் மட்டும் இழுக்கப்படுகின்றன. 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட அம்மன் தோ் சேதமடைந்ததால் புதிய தோ் செய்ய அறநிலையத் துறை அனுமதி வழங்கியது.

உபயதாரா் நிதியில் ரூ.88.30 லட்சத்தில் 24 அடி உயரம், 12 அடி அகலத்தில் புதிய தோ் செய்யப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

வைகாசி திருவிழாவில் வருகிற 29-ஆம் தேதி நடைபெறும் தேரோட்டத்தில் புதிய தேரில் சுவாமியும், பழைய தேரில் அம்மனும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பா்.

Story image