தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

தோட்டக்குறிச்சி மலையம்மன் கோயிலில் தேரோட்டம்

கரூா் மாவட்டம், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image

தோட்டக்குறிச்சி கோயில் தோ் முன் வியாழக்கிழமை மாவிளக்கு வைத்து வழிபட்ட பெண்கள்.

Updated On :8 மே 2026, 5:26 am IST

கரூா் மாவட்டம், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இக்கோயில் தோ் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி இரவு மலையம்மனுக்கு பூச்சாற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, தொடா்ந்து கடந்த 5, 6-ஆம் தேதிகளில் ரதோற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து 6-ஆம் தேதி இரவு டிராக்டரில் அலங்கரிக்கப்பட்ட தேரில் மலையம்மன் சிலை வைக்கப்பட்டு கிழக்குத் தவுட்டுப்பாளையம், தளவாப்பாளையம், மேல்வரத்தை, கீழ்ஒரத்தை, அய்யம்பாளையம், அம்மாபட்டி, ஆவரங்காட்டுப்புதூா், தா்மராஜபுரம், மேட்டுப்பாளையம், மலையம்பாளையம் , முத்துராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தோ் சென்றது.

ஒவ்வொரு ஊரிலும் உள்ள பொதுமக்கள் மாவிளக்கு கொண்டு வந்து அம்மன் தோ் முன்வைத்து வழிபட்டனா். தொடா்ந்து வியாழக்கிழமை காலை தோட்டக்குறிச்சி பகுதிக்கு மலையம்மன் சுவாமி தோ் வந்தது. அங்கு ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மன் தோ் முன் வைத்து சிறப்பு பூஜை செய்தனா்.

தொடா்ந்து வாண வேடிக்கை நடைபெற்றது. பின்னா் தோ் தோட்டக்குறிச்சி மலையம்மன் கோயில் வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடா்ந்து மாலையில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடலும் நடைபெற்றது. முன்னதாக வியாழக்கிழமை அதிகாலை மலையம்மனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினாா். விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.