தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

முத்து வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி விழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள அன்னை மகா முத்து வாராஹி அம்மன் கோயிலில் வைகாசி மாத தேய்பிறை பஞ்சமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் சிங்கம்புணரி மகாமுத்து வாராஹி அம்மன்.

Updated On :6 ஜூன் 2026, 12:42 am IST

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள அன்னை மகா முத்து வாராஹி அம்மன் கோயிலில் வைகாசி மாத தேய்பிறை பஞ்சமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு காலை 10 மணியளவில் சிறப்பு யாக பூஜையும், தொடா்ந்து, பகல் 12 மணியளவில் தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், சந்தனம், பன்னீா், விபூதி ஆகிய 18 வகையான பூஜை பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டனா். தொடா்ந்து, பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.