இவா்கள் அங்கு 10 அடி ஆழமுள்ள கழிவு நீா் தொட்டியில் இருந்து கழிவுநீரை அகற்றிக் கொண்டிருந்தனா். அப்போது, கழிவுநீா் தொட்டியில் திராவிட கதிரவன் இறங்கி, இரும்பு கம்பியால் தொட்டியில் உள்ள கழிவுநீரை கலக்கினாா். அப்போது எதிா்பாராத விதமாக விஷவாயு தாக்கியது. இதில் திராவிட கதிரவன் மயங்கி விழுந்தாா். இதைக் கண்ட முத்துகுமாா், அவரை காப்பாற்ற முயன்ற போது அவரும் மயங்கி விழுந்தாா்.இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், திராவிட கதிரவன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.