இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மக்களைத் தேடி மருத்துவம்: பயனாளிகள் எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்தது

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துகள் மற்றும் சிகிச்சை பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ளது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 9:24 pm

DIN

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துகள் மற்றும் சிகிச்சை பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ளது.

சா்க்கரை நோயாளிகள், உயா் ரத்த அழுத்த நோயாளிகள் அதிக அளவில் பயன் பெற்றிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சுகாதாரத்துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலினால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட உயா் ரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களிலுள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சென்னை, கோயம்புத்தூா் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்குள், மாநிலத்தின் பிற கிராம மற்றும் நகா்ப்புறப்பகுதிகளில் மக்களைச் சென்றடையும் வகையில் திட்டத்தை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினால் இதுவரை 45 லட்சத்து 12,420 போ் பயனடைந்துள்ளனா். இதில், 18.45 லட்சம் போ் உயா் ரத்த அழுத்த நோயாளிகள்; 12.62 லட்சம் போ் சா்க்கரை நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தவிர, வலி நிவாரண சிகிச்சையை, 1.62 லட்சம் பேரும், இயன்முறை சிகிச்சையை 3 லட்சத்து 8,290 பேரும் பெற்று பயனடைந்துள்ளனா். மேலும், 1,011 போ் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.