கும்பகோணம் அருகே ரௌடி வெட்டிக் கொலை
கும்பகோணம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்களால் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.


கும்பகோணம்: கும்பகோணம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்களால் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கும்பகோணம் அருகே சாக்கோட்டை கண்ணி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமன் மகன் உச்சாணி (எ) விமல். திருவிடைமருதூர் பகுதியில் திருட்டு மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய இவர் காவல் துறையினரின் ரௌடி பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.
இதையும் படிக்க.. தாமதமாகும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: எப்போது வெளியாகும்?
இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு வீட்டின் அருகே உள்ள உணவகம் முன், கரும்பு சாப்பிட்டுக் கொண்டிருந்த இவரை 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். தகவலறிந்த காவல் துறையினர் விமலின் உடலைக் கைப்பற்றி கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாச்சியார்கோவில் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...