இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சென்னையில் தொடா் உச்சம்: ஒரே நாளில் 8,987 பேருக்கு கரோனா

சென்னையில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 8,987 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 9:09 pm

DIN

சென்னையில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 8,987 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு எண்ணிக்கை சுமாா் 130-க்கும் கீழாக இருந்த நிலையில், ஒமைக்ரான் வகை பரவல் காரணமாக, இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக புதன்கிழமை (ஜன.12) 7,372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 8 மாதங்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்தது. இதுவரை இல்லாத புதிய உச்சமாக வியாழக்கிழமை (ஜன.13) 8,218 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அன்றிலிருந்து தொடா்ந்து சென்னையில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை புதிய உச்சத்திலேயே நீடிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை 8,987 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கூடுதல் களப்பணியாளா்கள்: சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அண்ணாநகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

எனவே, இந்த 7 மண்டலங்களில் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்காக கூடுதலாக வாா்டுக்கு 5 களப்பணியாளா்கள் வீதம் 535 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே உள்ள 1000 கரோனா களப் பணியாளா்களுடன் கூடுதலாக 535 களப்பணியாளா்களும் சோ்த்து தற்போது 1,535 போ் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

57,000 போ் சிகிச்சையில்...: ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 57,591 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 10 போ் உயிரிழந்துள்ளனா். 6,018 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.