புதுச்சேரியில் நெஞ்சக நோய் மருத்துவமனை கரோனா மையமாக மாற்றம்

புதுச்சேரியில் உள்ள நெஞ்சக நோய் மருத்துவமனை, கரோனா சிறப்பு மருத்துவ மையமாக மாற்றப்பட்டு, அங்குள்ள 180 படுக்கைகளும், கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 
புதுச்சேரியில் நெஞ்சக நோய் மருத்துவமனை கரோனா மையமாக மாற்றம் (கோப்பிலிருந்து)
புதுச்சேரியில் நெஞ்சக நோய் மருத்துவமனை கரோனா மையமாக மாற்றம் (கோப்பிலிருந்து)
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள நெஞ்சக நோய் மருத்துவமனை, கரோனா சிறப்பு மருத்துவ மையமாக மாற்றப்பட்டு, அங்குள்ள 180 படுக்கைகளும், கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மருத்துவர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு கடந்த ஒரு வாரத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. சென்னையின் கரோனா பரவுவதில் ஏற்பட்ட மாற்றம்: காரணம் இதுதான்!

சுகாதாரத் துறை இயக்குநர் ஜி. ஸ்ரீராமுலு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஒரு வாரத்தில், 12 மருத்துவர்கள் உள்பட 30 சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கரோனா சிகிச்சையில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள நெஞ்சக நோய் மருத்துவமனை, கரோனா சிறப்பு மருத்துவ மையமாக மாற்றப்பட்டு, அங்குள்ள 180 படுக்கைகளும், கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அதில் 43 படுக்கைகள் நிரம்பியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com