ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மேக்கேதாட்டு விவகாரம்: ஒசூர் எல்லையில் விவசாயிகள் போராட்டம்

ஓசூர் அருகே கர்நாடக - தமிழக எல்லையில் மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை தடுத்த நிறுத்தக் கோரி புதன்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

News image
ஒசூர் எல்லையில் விவசாயிகள் போராட்டம்
Updated On :19 ஜனவரி 2022, 6:14 am

DIN

ஒசூர்: ஓசூர் அருகே கர்நாடக - தமிழக எல்லையில் மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை தடுத்த நிறுத்தக் கோரி புதன்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநில எல்லைப் பகுதியில் மேகதாது அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நடத்தும் பாதயாத்திரை ஆர்ப்பாட்டத்தை கண்டித்து, அதைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் ,காவேரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் மறைமுக சுழற்சியை கைவிட்டு தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட அனுமதித்திட  வேண்டும், மேகதாது அணை கட்ட  கர்நாடகாவிற்கு வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய கொடுத்த அனுமதியை திரும்பப் பெற்றிட வேண்டும், என வலியுறுத்தி ஓசூரில் பேரணி நடத்தி பின்னர் மாநில எல்லையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

Story image
Story image

இதில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளரரும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பிஆர் பாண்டியன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.