விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மேக்கேதாட்டு விவகாரம்: ஒசூர் எல்லையில் விவசாயிகள் போராட்டம்

ஓசூர் அருகே கர்நாடக - தமிழக எல்லையில் மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை தடுத்த நிறுத்தக் கோரி புதன்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

News image

ஒசூர் எல்லையில் விவசாயிகள் போராட்டம்

Updated On :19 ஜனவரி 2022, 6:14 am

ஒசூர்: ஓசூர் அருகே கர்நாடக - தமிழக எல்லையில் மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை தடுத்த நிறுத்தக் கோரி புதன்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநில எல்லைப் பகுதியில் மேகதாது அணை கட்ட வலியுறுத்தி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நடத்தும் பாதயாத்திரை ஆர்ப்பாட்டத்தை கண்டித்து, அதைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் ,காவேரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் மறைமுக சுழற்சியை கைவிட்டு தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட அனுமதித்திட  வேண்டும், மேகதாது அணை கட்ட  கர்நாடகாவிற்கு வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய கொடுத்த அனுமதியை திரும்பப் பெற்றிட வேண்டும், என வலியுறுத்தி ஓசூரில் பேரணி நடத்தி பின்னர் மாநில எல்லையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

Story image
Story image

இதில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளரரும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பிஆர் பாண்டியன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.