கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விலகியது

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விலகுவதற்கான சாதகமான சூழல் அமைந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விலகியது

Updated On :22 ஜனவரி 2022, 12:17 pm


சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விலகுவதற்கான சாதகமான சூழல் அமைந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளம் மற்றும் அதனை ஒட்டியிருக்கும் பகுதிகள், ஆந்திர கடற்கரையோர பகுதிகள், ஏனாம், ராயலசீமா மற்றும் கர்நாடகத்தின் தெற்கு உள் மாவட்டங்களில், ஜனவரி 22ஆம் தேதியுடன் வடகிழக்குப் பருவமழை விலகுவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழையானது கடந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கியது. வழக்கமான மழை அளவை விடவும் பெரும்பாலான மாநிலங்களில் அதிகப்படியான மழைப்பொழிவை இந்த வடகிழக்குப் பருவமழை கொடுத்தது.

தமிழகத்துக்கு அதிக மழைப்பொழிவை கொடுக்கும் வடகிழக்குப் பருவமழை காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஆகும். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். டிசம்பர் இறுதி வாரத்தில் நிறைவுபெறும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை நிறைவு பெற்றுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.