ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: டெபாசிட் 2 மடங்காக உயர்வு

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகை 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

News image
தமிழக தேர்தல் ஆணையம்
Updated On :22 ஜனவரி 2022, 5:40 pm

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகை 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 498 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகையை மாநிலத் தேர்தல் ஆணையம் 2 மடங்காக உயர்த்தியுள்ளது. இதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ 4,000, நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ 2,000 காப்புத்தொகை கட்ட வேண்டும். 
பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ரூ 1,000 காப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர், பழங்குடியினர் காப்புத் தொகையில் பாதி செலுத்தினால் போதுமானது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.