சர்வதேச பெண் குழந்தைகள் நாள்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை வாழ்த்து

சர்வதேச பெண் குழந்தைகள் நாளையொட்டி, தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச பெண் குழந்தைகள் நாள்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை வாழ்த்து
Published on
Updated on
1 min read



சர்வதேச பெண் குழந்தைகள் நாளையொட்டி, தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை இந்த சமூகம் நிரூபிப்பதற்கு அடித்தளமாக இந்த சர்வதேச பெண் குழந்தைகள் நாளில் உறுதியேற்போம். 

பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம். 

புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம். அனைவருக்கும் பெண் குழந்தைகள் நாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com