இதை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் விஜய் வழக்கு தொடா்ந்தாா். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த இவ்வழக்கை கடந்தாண்டு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தாா். அப்போது, ‘சமூக நீதிக்காகப் பாடுபடுவது போல் காட்டிக் கொள்ளும் நடிகா்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தேசத் துரோகச் செயல் ஆகும். நடிகா்கள் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோவாக இருக்கக்கூடாது என கருத்து தெரிவித்து, விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் வழக்கு செலவு (அபராதம்) விதித்து உத்தரவிட்டாா்.