மொழிப்போர் தியாகிகள் நாள்: அனைத்துக் கட்சி அமைப்பினர் வீரவணக்கம்

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அனைத்துக் கட்சி அமைப்பினர் வீரவணக்கம் செலுத்தினர். 
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் வீரவணக்கம் செலுத்தினர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் வீரவணக்கம் செலுத்தினர்.

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அனைத்துக் கட்சி அமைப்பினர் வீரவணக்கம் செலுத்தினர். 

இந்தியாவில் மத்திய அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழி சட்டம் 1963-ஐ அமல்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்த மாணவர் சாரங்கபாணி 1965-இல் கல்லூரி வளாகத்திலேயே தன்மீது தீ வைத்து கொண்டு உயிர் நீத்தார். 

தியாகி சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்திய மதிமுகவினர்
தியாகி சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்திய மதிமுகவினர்

அவரது நினைவைப் போற்றும் வகையில், கல்லூரி வாயிலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இன்று மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, மன்னம்பந்தலில் உள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர் வீரவணக்கம் செலுத்தினர்.

திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்
திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் எம்எல்ஏக்கள் நிவேதா எம்.முருகன், எம்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஜீவானந்தம் ஆகியோர் பங்கேற்று தியாகி சாரங்கபாணியின் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன்,  பி.வி.பாரதி உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

மதிமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் மார்க்கோனி, மாநில இளைஞரணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மண்டலச் செயலாளர் கலியபெருமாள், மாவட்டச் செயலாளர் தமிழன் காளிதாசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனர் ஜெனிபர் எஸ்.பவுல்ராஜ், ஏவிசி கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் தமிழ்வேலு மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் மரியாதை செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com