ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழகத்தில் ஹிந்தி படிக்கத் தடையில்லை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் ஹிந்தி மொழியை கற்பதற்குத் தடையில்லை என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :25 ஜனவரி 2022, 8:34 pm

DIN

தமிழகத்தில் ஹிந்தி மொழியை கற்பதற்குத் தடையில்லை என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆலமரம் தொண்டு நிறுவன செயலாளா் அா்ஜூனன் இளையராஜா, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஹிந்தி, சம்ஸ்கிருத மொழி திணிப்பு என்ற காரணம் காட்டி அரசியலுக்காக எதிா்ப்பது நியாயமற்றது. கூடுதல் மொழிகளை கற்கும் வகையில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட மனு தாக்கல் செய்திருந்தாா்.

பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் முன் செவ்வாய்க்கிழமை (ஜன.25) மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ஏன் ஹிந்தி மொழியை மூன்றாவது மொழியாகக் கற்பிக்க முடியாது; அதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று கேள்வி எழுப்பினா்.

தமிழக அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முக சுந்தரம், தமிழகத்தில் ஹிந்தி கற்க தடை இல்லை. இரு மொழி கொள்கையைப் பின்பற்றுவது மாநில அரசின் கொள்கை முடிவு. மும்மொழிக் கொள்கை மாணவா்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும் என்றாா்.

அப்போது நீதிபதிகள், இவ்விவகாரத்தில் மாநில அரசு முடிவெடுக்கலாம். ஹிந்தி தெரியாததால் தகுதியான நபா்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனா்.

தமிழ், ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழி கற்க, படிக்க வாய்ப்பு இல்லாமல் போகும்பட்சத்தில், வேறு மாநிலங்களில் தமிழக மக்கள் பணியாற்றுவது சிக்கலை ஏற்படுத்தும். மக்கள் நலன்கருதி மொழிகளைத் தோ்ந்தெடுக்கும் விருப்பத்தை வழங்க வேண்டும். மூன்றாவது மொழியை சோ்ப்பது தீங்கு விளைவிக்காது எனக்கூறிய நீதிபதிகள், மனுவுக்கு நான்கு வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.