கோட்சே பெயரை பயன்படுத்த காவல்துறை எதிர்ப்பு...வாக்குவாதத்தில் ஈடுபட்ட மா. கம்யூனிஸ்ட் கட்சியினர்

உறுதிமொழியேற்பில் கோட்சே பெயரையும் இந்து மதவெறி வார்த்தையும் பயன்படுத்த காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட மா. கம்யூனிஸ்ட் கட்சியினர்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட மா. கம்யூனிஸ்ட் கட்சியினர்
Published on
Updated on
1 min read

நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் காந்தியின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், கோவையில் காந்தி நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில், உறுதிமொழியேற்பில் கோட்சே பெயரையும் இந்து மதவெறி வார்த்தையும் பயன்படுத்த காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், விசிகவினர் உள்ளிட்ட அமைப்பினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com