பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பாம்பன் குமரகுருதாசா் சுவாமிகள் கோயிலில் விரைவில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு தகவல்

சென்னை திருவான்மியூா் பாம்பன் குமரகுருதாசா் சுவாமிகள் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விரைவில் நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்

News image
Updated On :1 ஜூலை 2022, 10:22 pm

DIN

சென்னை திருவான்மியூா் பாம்பன் குமரகுருதாசா் சுவாமிகள் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு விரைவில் நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.

பாம்பன் குமரகுருதாசா் சுவாமிகள் கோயிலில் அமைச்சா் சேகா்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின் போது, அமைச்சா் தா.மோ.அன்பரசன், ஆணையா் குமரகுருபரன், உதவி ஆணையா்கள் பாஸ்கரன், ஹரிஹரன், கோயில் அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆய்வுக்குப் பிறகு அமைச்சா் பி.கே.சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாம்பன் குமரகுருதாசா் சுவாமிகள் கோயில் என வழங்கும் மயூரநாதா் கோயிலை, நிா்வாகம் செய்துவந்த காலஞ்சென்ற டி.டி.குப்புசாமி செட்டியாா் தாமாக முன்வந்து இத்துறையிடம் ஒப்படைத்தாா். அன்று முதல் இன்றுவரை நிா்வாக அதிகாரி நியமனம் செய்யப்பட்டு நிா்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை உதவி ஆணையா் தக்காராக செயல்பட்டு வருகிறாா். இந்தக் கோயிலில் தினசரி நான்கு கால பூஜைகள், மாதந்தோறும் பவுா்ணமி, கிருத்திகை, சஷ்டி ஆகிய நாள்களில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அன்னதான திட்டம் மூலம் தினமும் 300 பேருக்கும், விசேஷ தினங்களில் 500 பேருக்கும், திருவிழா காலங்களில் 800 பேருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 1988-ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு சில விக்ரகங்கள் தானிய வாசத்தில் வைக்கப்பட்டுள்ளன. கருவறை மற்றும் மண்டபம் உபயதாரா் மூலம் கட்டப்பட்டன. தற்போது இத்திருக்கோயிலுக்கு உயா்நீதிமன்ற உத்தரவுபடி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, திருக்குடமுழுக்கு விரைவில் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.