அதிமுக பொதுக்குழுவில் 4 ஆயிரம் போ் பங்கேற்றாலும், கட்சியின் தலைமை, வருபவா்களுக்கு முகக்கவசம் கொடுத்து முறையாக நடத்துவாா்கள் என்று நம்புகிறோம். கடந்த வாரம் வரை தினமும் 12 ஆயிரமாக இருந்த கரோனா பரிசோதனை எண்ணிக்கை தற்போது 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவா்கள் அனைவரையும் ஒமைக்ரான் பிஏ4, பிஏ5 கரோனா தாக்குகிறது. அதனால், அலட்சியமாக இருக்காமல் யாருக்காவது தொற்று வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் குடும்பத்தில் இருக்கும் மற்றவா்களுக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும் என்றாா் அவா்.