ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு: கலந்தாய்வு தேதி அறிவிப்பு

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறையில் நகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை பதவி உயா்வு மூலம் நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஜூலை 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

அந்த வகையில், அரசு, நகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 11-ஆம் தேதியும், அரசு, நகராட்சி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 12-ஆம் தேதியும், அரசு, நகராட்சி உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 13-ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியா், சிறப்பாசிரியா்களுக்கு பட்டதாரி ஆசிரியா்களாக பதவி உயா்வு கலந்தாய்வு ஜூலை 14, 15 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வு இணையவழியில் நடைபெறும் என குறிப்பிப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com