வேதாரண்யத்தில் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் இன்று (ஜூலை 5) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் இன்று (ஜூலை 5) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நுழைவு வாயிலில் நின்று அலுவலக வளாகத்துக்குள் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்புடைய அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் ஒன்றிய செயலாளர் வி.இளையபெருமாள் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைச் செயலாளர் கே.சித்தார்த்தன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வேலை நாள்களை 150 நாள்களாக உயர்த்தவும் ரூ.381 சம்பளம் வழங்கவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...