புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மானாமதுரை அருகே 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஆலை உரிமையாளர் கைது

மானாமதுரை அருகே அரிசி அரவை ஆலையில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆலை உரிமையாளரை மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

News image

மானாமதுரை அருகே வேதியரேந்தலில் அரவை ஆலையில் பதுக்கபபடடு போலீசார் கைப்பற்றிய ரேஷன் அரிசி மூட்டைகள்.

Updated On :6 ஜூலை 2022, 6:14 am

DIN

 
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புதன்கிழமை அரிசி அரவை ஆலையில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆலை உரிமையாளரை மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

மானாமதுரை அருகே வேதியரேந்தல் கிராமத்தில் உள்ள தனியார் அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து சார்பு ஆய்வாளர் கணேச லிங்கபாண்டி தலைமையில் போலீசார் அந்த அரிசி ஆலையை சோதனையிட்டனர். அப்போது அங்கு 300 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் பாலிஷ் செய்யபப்ட்ட ரேஷன் அரிசி என 19 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் இந்த அரிசி மூடைகளை கைப்பற்றினர். ஆலை உரிமையாளர் ஜெயராமன் மற்றும் கார்த்திக், ராஜா, சக்தி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜெயராமனை கைது செய்துள்ளனர்.

Story image

வேதியரேந்தல் கிராமத்தில் போலீசார் சோதனையிட்ட அரிசி அரவை ஆலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.