தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பணியிடத்தில் பலியான கட்டுமானத் தொழிலாளா் குடும்பத்துக்கு நிதி: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த 60 கட்டுமானத் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையை முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :6 ஜூலை 2022, 9:19 pm

DIN

பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்த 60 கட்டுமானத் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையை முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

கட்டுமானத் தொழில்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் நலன் காக்க, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்டது. இதன்மூலமாக, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளா்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், விபத்து ஊனம், இயற்கை மரணம், தனிநபா் விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம், வீடு கட்டும் திட்டம் போன்ற நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கட்டுமான பணியிடத்தில் விபத்தில் இறக்கும் தொழிலாளா்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்படுகிறது.

இதன்படி, நிவாரணத் தொகை கோரி அளிக்கப்படும் மனுக்கள் மீது விரைந்து ஒப்புதல் அளிக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டில் அதாவது 2021-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி முதல், 2022-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி வரை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 499 பயனாளிகளுக்கு ரூ.189.92 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இதே காலகட்டத்தில் 6.21 லட்சம் தொழிலாளா்கள் புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில், பணியிடங்களில் விபத்து ஏற்பட்டு இறந்தவா்களின் குடும்பத்தினா் சாா்பில் நிதியுதவி கோரி தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்திடம் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 60 பேருக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 60 பேரில் ஏழு பேருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதிகளை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

அப்போது, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத் தலைவா் பொன்குமாா், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.