மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

புதுவையில் சென்டாக் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்

புதுவையில் நிகழாண்டு உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வுக்கு இணையவழி விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :8 ஜூலை 2022, 3:47 pm IST

புதுவையில் நிகழாண்டு உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வுக்கு இணையவழி விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதுவை அரசு சார்பில் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சார்பாக 2022 - 2023-ம் ஆண்டுக்கான நீட் அல்லாத கலை, அறிவியல், பொறியியல், செவிலியர் கல்லூரி படிப்புகளுக்கான சென்டாக் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை ( ஜூலை 8) முதல் தொடங்கியது. 

இதையும் படிக்கலாம்: துப்பாக்கியால் சுடப்பட்ட அபே உயிரிழந்தார்

புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். அதற்கான வழிகாட்டு கையேடும் வெளியிடப்பட்டது. கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

செண்டாக் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 20-07-2022 மாலை 5 மணி வரை இறுதி நாளாகும். 

www.centacpuducherry.in என்ற இணையதள மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.