புதுவையில் சென்டாக் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்

புதுவையில் நிகழாண்டு உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வுக்கு இணையவழி விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புதுவையில் சென்டாக் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்

புதுவையில் நிகழாண்டு உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வுக்கு இணையவழி விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

புதுவை அரசு சார்பில் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சார்பாக 2022 - 2023-ம் ஆண்டுக்கான நீட் அல்லாத கலை, அறிவியல், பொறியியல், செவிலியர் கல்லூரி படிப்புகளுக்கான சென்டாக் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை ( ஜூலை 8) முதல் தொடங்கியது. 

இதையும் படிக்கலாம்: துப்பாக்கியால் சுடப்பட்ட அபே உயிரிழந்தார்

புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். அதற்கான வழிகாட்டு கையேடும் வெளியிடப்பட்டது. கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

செண்டாக் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 20-07-2022 மாலை 5 மணி வரை இறுதி நாளாகும். 

www.centacpuducherry.in என்ற இணையதள மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com