புதுவையில் நிகழாண்டு உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வுக்கு இணையவழி விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
புதுவை அரசு சார்பில் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சார்பாக 2022 - 2023-ம் ஆண்டுக்கான நீட் அல்லாத கலை, அறிவியல், பொறியியல், செவிலியர் கல்லூரி படிப்புகளுக்கான சென்டாக் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் பணி வெள்ளிக்கிழமை ( ஜூலை 8) முதல் தொடங்கியது.
புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். அதற்கான வழிகாட்டு கையேடும் வெளியிடப்பட்டது. கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
செண்டாக் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 20-07-2022 மாலை 5 மணி வரை இறுதி நாளாகும்.
www.centacpuducherry.in என்ற இணையதள மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.