திருவண்ணாமலையில் கருணாநிதி சிலையை திறந்துவைத்தார் முதல்வர் 

திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். 
திருவண்ணாமலையில் கருணாநிதி சிலையை திறந்துவைத்தார் முதல்வர் 
Updated on
1 min read

திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். 

திருவண்ணாமலையில் வேலூா் சாலையில் புதிதாக அண்ணா நுழைவு வாயில் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு 8 அடி உயரம் கொண்ட வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அண்ணா நுழைவாயிலையும், கருணாநிதி சிலையையும் முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். முன்னதாக கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி கிராமத்தில் நடைபெறும் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சியையும் அவர் தொடக்கிவைத்தார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு அரசு, திமுக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com