வேலூர் மாவட்டத்தில் வேலூர் சிப்பாய் புரட்சி தினத்தை நினைவுகூரும் வகையில் சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை மரியாதை செலுத்துகிறார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 10.07.2022 அன்று (ஞாயிற்று கிழமை) காலை 10.00 மணிக்கு வேலூர் மாவட்டத்தில் வேலூர் சிப்பாய் புரட்சி நாளை நினைவுகூரும் வகையில் சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.
தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி வேலூர் கோட்டை மைதானத்திற்கு வருகை தந்து, ஐஎன்ஏ வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், என்.சி.சி மாணவர்கள் , என்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.