நாகப்பட்டினம் : உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இறைவனின் கட்டளையை ஏற்று, தன் மகன் இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹீம் நபியின்( ஸல்) தியாகத்தைப் போற்றும் வகையில் தியாகத் திருநாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்திருநாளையொட்டி, நாகூர் ஆண்டவர் தர்காவில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் பக்ரீத் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் நாகூர் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக்கொண்டனர்.