ஓ.பி.எஸ்.ஸுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

சென்னை: ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கட்சி உறுப்பினர் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர். நீதிமன்றத்தின் மூலமாக சாதிக்க முயற்சிக்கிறார் என ஓபிஎஸுக்கு நீதிபதி கிருஷ்ணன ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கையேப்பம்தான் மேலோங்கி இருக்கும் என நீதிபதி கிருஷ்ணன ராமசாமி தெரிவித்துள்ளார்.

மேலும்,  ஒருங்கிணைப்பாளர் என்பவர் கட்சிநலன், வளர்ச்சிக்கு ஏற்றவாறு உறுப்பினர்களை சமாதானம் செய்ய வேண்டும். பொதுக்குழுவில் தீர்வு கிடைக்காவிடில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம். சிறந்த நிர்வாகத்துக்கான கட்சி விதிகளை வகுக்கும்  விவாகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது.

சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தவில்லை எனில் உச்ச நீதிமன்றம்தான் பரீசிலிக்க முடியும் என்று நீதிபதி கிருஷ்ணன ராமசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com