சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமணமான மூன்று ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்ததால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மயிலக்கோயில் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகள் இலக்கியா(28) என்பவருக்கும், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அன்புதாசன் என்பவரின் மகன் பாண்டியராஜன்(35) என்பவருக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகளான நிலையில் இதழினி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இலக்கியாவை கணவர் பாண்டியராஜன் மற்றும் குடும்பத்தினரிடையே வரதட்சணை பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மயிலக்கோயில் தனது தந்தை வீட்டிற்கு கடந்த 10-ம் தேதி இலக்கியா வந்திருந்தார். நேற்று இலக்கியாவிற்கு விவாகரத்து கேட்டு, நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பபட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | கோத்தபய ராஜபட்ச பதவி விலக தாமதிப்பது ஏன்?
இதனால் மனமுடைந்து நேற்று இரவு இலக்கியா வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இலக்கியாவின் தந்தை குணசேகரன், கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்று இலக்கியாவின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாத எண்கணித பலன்கள் – 8

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

மே மாத எண்கணித பலன்கள் – 5
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

