வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயணன்குப்பத்தில் இருந்து பேருந்தை இயக்கம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேருந்தை சிறைப்பிடித்து மக்கள், மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயணபுரம் பஸ் நிறுத்தம் பஜனை கோயில் அருகில் வெள்ளிக்கிழமை காலை 8.20 மணி முதல் 9.30 மணி வரை ஆற்காடு - பாணாவரம் செல்லும் அரசு நகர பேருந்து டிஎன் 23, என் 2351 (தடம் எண்:7டி.ஏ)ஆற்காடு பணிமனையில் இருந்து பாணாவரம் நோக்கிச் சென்ற போது, நாராயணன்குப்பம் பொதுமக்கள் மாணவ, மாணவியர் அரசு நகர பேருந்தை சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாராயணன்குப்பத்தில் இருந்து பேருந்தை இயக்க கோரிக்கை வைத்து பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள், மாணவ, மாணவிகள்.
அதாவது, காலை 8 மணிக்கு நாராயணன் குப்பத்தில் இருந்து புறப்பட்டு வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, ஆற்காடு செல்லும் நகர பேருந்தை பாணாவரம் வரை நீட்டிப்பு செய்ததால் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி செல்வதற்கு அரை மணி நேரம் காலதாமதமாகவும், மேற்படி பேருந்தை தங்கள் கிராமத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பேருந்தை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர்.
தகவல் அறிந்து வாலாஜாபேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தீபன் சக்கரவர்த்தி சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையொட்டி, சிறைபிடித்த பேருந்தை விடுவித்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய ஆவின் திட்டம்!

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

நலம் டிஎன் இணையதள சேவையை தொடக்கி வைத்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

உறவினர்களுக்கு கோயில் நிலத்தை பத்திரப் பதிவு செய்தேனா? அமைச்சர் ரமேஷ் விளக்கம்!
விடியோக்கள்

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3



