தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்ட வழக்கு: நாளை தீர்ப்பு

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் நாளை மதியம் 2.15-க்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image

சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)

Updated On :19 ஜூலை 2022, 10:42 pm IST

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் நாளை (ஜூலை 20) பிற்பகல் 2.15-க்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எடப்பாடி கே.பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றுவது தொடா்பாக எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீா் செல்வம் ஆதரவாளா்களிடையே கடந்த 11-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. 

இதில், இரு தரப்பினரும் மாறி, மாறி கற்களாலும், உருட்டுக் கட்டைகளாலும் தாக்கிக் கொண்டனா். இந்த மோதலில் 2 காவலர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இரு பேருந்துகள் உள்பட 14 வாகனங்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக வருவாய்த்துறையினா் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனா்.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிா்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீா்செல்வமும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பை சென்னை உயா் நீதிமன்றம் கடந்த 16ஆம் தேதி, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

இந்நிலையில், அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.