சேவூரில் தனியார் குழுக்களில் ரூ.2.55 கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு, தலைமறைவான தாய், மகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து சேவூர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,
சேவூர், சந்தையப்பாளையம் பகுதியில் தாய் தனபாக்கியம், மகள் கௌரிசுரேஷ் ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களுடன் எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண்கள் இணைந்து பல்வேறு தனியார் நிதி நிறுவன குழுக்களிடம் கடன் பெற்றுத் திருப்பி செலுத்தி வந்தோம். ஆனால் தாய் தனபாக்கியம், மகள் கௌரிசுரேஷ் ஆகியோர் மட்டும் கடனை திருப்பி செலுத்தாமல் தாமதித்து வந்தனர்.
தற்போது இவர்கள் எங்கள் பகுதியை விட்டுத் தலைமறைவாகி விட்டனர். இதனால் தனியார் நிதி நிறுவன குழுதாரர்கள், ஜாமீன் கொடுத்த எங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், மன உளைச்சலுக்கு ஆளாகி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வருகிறது. ஆகவே 9க்கும் மேற்பட்ட குழுவில் ரூ.2.55 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றுத் தலைமறைவான தனபாக்கியம், கௌரிசுரேஷ் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
புகாரைப் பெற்றுக் கொண்ட சேவூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தலைமறைவானவர்கள் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனக்குத்தானே பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிகை!

இன்றைய செய்திகள் ஜூலை 8 - நேரலை
டாக்ஸிக் படத்தின் தபாஹி பாடல் வெளியீடு!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!



