தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கூடலூரில் மத்திய அரசைக் கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

கூடலூரில்  மத்திய அரசைக் கண்டித்து வாயில் கருப்பு  துணி கட்டி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

News image
Updated On :20 ஜூலை 2022, 9:08 am

DIN

கூடலூரில்  மத்திய அரசைக் கண்டித்து வாயில் கருப்பு  துணி கட்டி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம் கூடலூரில்  எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக பழைய பேருந்து நிலையம்  மற்றும் கிழக்கு மெயின் பஜார் ஆகிய இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை  நடைபெற்றது. 

நகரத்  துணைத்தலைவர் கான் அப்துல் கபார்கான்  தலைமையில், 

மாவட்ட பொருளாளர் அக்கிம் ராஜா  முன்னிலையில், சபீர் கான்  வரவேற்றார். ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி தலைவர் எம்.எம்.அஜ்மீர் கான், தொகுதி செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட பொது செயலாளர் கம்பம் சாதிக் அலி ஆகியோர் நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை தடுக்கும் சட்டம் இயற்றிய மத்திய அரசைக் கண்டித்துப் பேசினர், 

நகரச் செயலாளர் காதர் மைதீன்  நன்றி கூறினார், வாயில்  கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேலானவர்கள்  கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.