தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போலி பத்திரப்பதிவு: திருவள்ளூர் சார் பதிவாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

திருவள்ளூரில் போலியான பத்திரப் பதிவு செய்ததாக சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து பத்திரப்பதிவு ஐஜி உத்தரவிட்டுள்ளார்.

News image

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சார் பதிவாளர் சுமதி

Updated On :20 ஜூலை 2022, 9:19 am

DIN

திருவள்ளூரில் போலியான பத்திரப் பதிவு செய்ததாக சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து பத்திரப்பதிவு ஐஜி உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சார் ஆட்சியராக பணியாற்றி வருபவர் சுமதி. இந்நிலையில் ஆவடி மோரை கிராமத்தில் உள்ள ஒருவரின் நிலத்தைப் போலியாக ஆவணம் தயார் செய்து திருவள்ளூர் சார் பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்துள்ளதாகவும், போலியான ஆவணங்கள் கொண்டு அதிகளவில் பத்திரப்பதிவு திருமணங்கள் செய்து வைத்தாகவும் அவர் மீது தொடர்ந்து பத்திரப்பதிவு ஐஜிக்கு புகார் சென்றது. 

இதையடுத்து சார் பதிவாளர் சுமதியை தற்காலிக பணிநீக்கம் செய்து பத்திரப்பதிவு ஐஜி சிவனருள் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் திருவள்ளூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அவதியுற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.