கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

வேதாரண்யம் பகுதியில் இடியுடன் கூடிய மழை: தலைஞாயிறில் 60 மிமீ எனப் பதிவு

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்று, இடியுடன் கூடிய மழைப்பொழிவு ஏற்பட்டது.

News image
வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிராமத்தில் நெல் தரிசு வயல்களில் தேங்கியுள்ள மழை நீர்.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:52 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்று, இடியுடன் கூடிய மழைப்பொழிவு ஏற்பட்டது.

வேதாரண்யம் அருகே வாய்மேடு, கரியாப்பட்டினம் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் லேசான மழைப் பொழிவு இருந்து வந்தது

இந்த நிலையில், பலத்த காற்று, இடியுடன் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது.

வேதாரண்யம் நகரப் பகுதியைவிட கிராமப்புறங்களில் அதிகமாக உணரப்பட்டது.

சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில்  32.6 மி.மீ., கோடியக்கரையில் 60.4 மி.மீ., கோடியக்கரையில் 30 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.