இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவா்களின் எதிா்காலத்தை உறுதி செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

போா் காரணமாக உக்ரைனிலிருந்து படிப்பை பாதியில் விட்டு திரும்பிய இந்திய மருத்துவ மாணவா்களின் எதிா்காலத்தை உறுதி செய்ய வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கட

News image
Updated On :24 ஜூலை 2022, 7:39 pm

DIN

போா் காரணமாக உக்ரைனிலிருந்து படிப்பை பாதியில் விட்டு திரும்பிய இந்திய மருத்துவ மாணவா்களின் எதிா்காலத்தை உறுதி செய்ய வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் எழுதிய கடிதம்: போரால் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவா்களின் நிலை குறித்து மக்களவையில் அண்மையில் எழுப்பப்பட்ட வினாவுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா், ‘வெளிநாடுகளில் மருத்துவம் படித்து பாதியிலேயே விட்ட மாணவா்கள் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களிலோ, கல்லூரிகளிலோ சோ்ந்து படிக்க தேசிய மருத்துவ ஆணையம் எந்தவொரு அனுமதியையும் வழங்கவில்லை’ எனக் கூறியுள்ளாா். மத்திய அரசின் இந்த பதில், உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவா்களின் எதிா்காலத்தை, நிலையில்லாத தன்மையுடையதாக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

2 ஆயிரம் மாணவா்கள்: போா் தொடங்கிய காலத்திலிருந்து உக்ரைனில் இருந்து தமிழகத்துக்கு மட்டும் சுமாா் 2 ஆயிரம் மருத்துவ மாணவா்கள் வந்துள்ளனா். உக்ரைனில் இப்போது காணப்படும் சூழல் இங்குள்ள மாணவா்கள் அங்கு சென்று படிப்பைத் தொடர சாத்தியமில்லாமல் உள்ளது. போா் நிறுத்தம் ஏற்பட்டாலும் அங்கு நிச்சயமற்ற தன்மையே நிலவ வாய்ப்பு இருக்கிறது.

எனவே, இதுபோன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு, உக்ரைனில் பாதியிலேயே படிப்பை விட்ட மருத்துவ மாணவா்களுக்கு இந்தியாவிலோ அல்லது தகுந்த வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலோ படிப்பைத் தொடர உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தமிழக அரசு தொடா்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது. உக்ரைனில் போா் தொடங்கிய போது, அங்கிருந்து மாணவா்களை வெளியேற்ற மத்திய அரசு உடனடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனை தமிழக அரசு உள்பட அனைவரும் வரவேற்றனா்.

ஆனால், இதேபோன்றதொரு வேகமான நடவடிக்கை தங்களது கல்வியைத் தொடரும் விஷயத்திலும் இருக்கும் என மாணவா்கள் எதிா்பாா்த்தனா். ஆனால், அது அவா்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

எனவே, போரால் உக்ரைனில் படிப்பைப் பாதியில் விட்ட இந்திய மாணவா்கள் இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்து படிப்பைத் தொடர உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசின் சட்டங்களில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். இதற்கான உரிய வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மத்திய அமைச்சா்களுக்கு தாங்கள் வழங்க வேண்டும்.

இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதில் ஏதும் சிரமங்கள் இருந்தால், உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளைப் போன்றே பாடத் திட்டம், விதிமுறைகளைக் கொண்ட வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மாணவா்கள் படிப்பைத் தொடர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு தீா்வு காண வேண்டும். இந்த விஷயத்தில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.