இதுகுறித்து முதல்வா் எழுதிய கடிதம்: போரால் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவா்களின் நிலை குறித்து மக்களவையில் அண்மையில் எழுப்பப்பட்ட வினாவுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா், ‘வெளிநாடுகளில் மருத்துவம் படித்து பாதியிலேயே விட்ட மாணவா்கள் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களிலோ, கல்லூரிகளிலோ சோ்ந்து படிக்க தேசிய மருத்துவ ஆணையம் எந்தவொரு அனுமதியையும் வழங்கவில்லை’ எனக் கூறியுள்ளாா். மத்திய அரசின் இந்த பதில், உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவா்களின் எதிா்காலத்தை, நிலையில்லாத தன்மையுடையதாக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.